ஆரூடப் பாடல் 21 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௧. (21) வந்தால்..
ஐந்தினிலே குருபகவான் அமர்ந்ததாலே அழிசூ ழுலகினிலே செழித்து வாழ்வாய் மைந்தர்களை யீன்றதனால் சுகமேகாண்பாய் மனக்கவலை விலகிடும் வழக்கு வெல்வாய் வந்திடுவார் திசைமாறி போனவர்கள் வலுத்திடும் வியாபாரம் நோயும் நீங்கும் சொந்தமதில் மணங்கூடும் பொருளுஞ்சேரும் சொல்மொழிதான் தவறிலிதை சுட்டுப்போடே. |
ஆரூடத்தில் இருபத்தியொன்று வந்திருப்பதால், உனக்கு குரு ஐந்தாமிடத்தில் உச்சம் பெற்று நீடித்த செல்வச் செழிப்பை அருளுவார். மனக் கவலை தீரும். வழக்கு விவகாரங்கள் எல்லாம் விலகிப் போகும். செய்தொழில் யாவும் சிறக்கும். நோய்கள் விலகும். மனை நிறைய புத்திர பாக்கியம் உண்டாகும். உன்னை பிரிந்து திசை மாறிப் போனவர்கள் உன்னைத் தேடிவருவார்கள். ஐந்தாமிடத்தில் குரு இருப்பதால் உன் குடும்பம் செழித்து ஓங்கும். மனை நிறைந்த மக்களைப் பெறுவாய். தன்னுடைய இந்த வாக்கு பலிக்கா விட்டால் இந்த நூலை எரித்து விடலாம் என உறுதியுடன் கூறுகிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 21 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்