ஆரூடப் பாடல் 19 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௯. (19) வந்தால்..
இதுவரையில் நீபட்ட துன்பமெல்லாம் யாராலும் கூறிடவே முடியாதப்பா சதிசெய்தார் உந்தனுக்கு வேணபேர்கள் சஞ்சலங்கள் மிகவடைந்தாய் தரணி தன்னில் நிதியான கேதுவுந்தன் ஜென்மம் விட்டு நீங்கிடுவான் இருபத்தியோர் நாள்போனால் அதன்பிறகு எது நீ செய்த போதும் ஆட்சியுடன் வாழ்ந்திடுவாய் அஞ்சிடாதே. |
ஆரூடத்தில் பத்தொன்பது வந்திருப்பதால், இது வரை கொடுமையான துயரத்தை அனுபவித்திருப்பாய். இப்போது மிகுந்த கவலை நிறைந்த மனிதனாய் இருக்கிறாய். நீ நம்பியவர்களே உனக்கு தீராத கெடுதலைச் செய்தனர். இந்த நிலைக்காக இனி கவலைப் படாதே. இன்றில் இருந்து இருபத்தியோரு நாளில் உன் ஜென்மத்தில் இருக்கும் கேது விலகிவிடுவான். அதன் பின்னர் நீ தொட்டதெல்லாம் துலங்கும். செய்தொழில் மேலோங்கும்... கவலைப் படாதே என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 19 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்