ஆரூடப் பாடல் 11 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௧. (11) வந்தால்..
உன்னுடைய மனம்போலே முடியுமப்பர் உத்தமனே குருவுனக்கு ஆட்சியானார் கண்ணியமாய் வாழ்ந்திடுவாய் கஷ்டந் தீரும் கார்த்திகேய னருளாலே செல்வமோங்கும் பண்டையநாள் பொருள்சேரும் பகையும் நீங்கும் பாலகனே உன்மனையில் விவாகங்கூடும் மன்னவனே இருபத்திமூன்று நாளில் மகாநல்ல சேதிவர மகிழுவாயே. |
ஆரூடத்தில் பதினொன்று வந்தால், உன் மனதில் நினைத்தது போல் காரியம் யாவும் முடியும். இப்போது உனக்கு குரு ஆட்சியாக இருப்பதால் கண்ணியமாக வாழ்வாய். துன்பங்கள் எல்லாம் தீரும். கார்த்திகேயன் அருளினாலே செல்வமெல்லாம் ஓங்கும். கைவராத பழைய கடன் எல்லாம் கைவந்து சேரும். பகை நீங்கிவிடும். வீட்டில் திருமணம் நடைபெறும். இன்னும் இருபத்தி மூன்று நாளில் நல்ல செய்தி ஒன்றுவரும். அது உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 11 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்