ஆரூடப் பாடல் 3 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩. (03) வந்தால்..
திரிபுரந்தனை யெரித்த தீனநாதன் திருவருளா லுந்தனுக்கு பெரியோர் களுதவியுண்டு பெறுவாய் பெண்டுபிள்ளை குடும்பமுடன் பெருத்துவாழ்வாய் பரிவான தொழில்முறையி லடைவாய்லாபம் பாராளும் மன்னர்களால் பெருமையுண்டு உரித்தான உந்தன்குல தெய்வந்தன்னை உத்தமனே துதிசெய்தால் உசிதமாமே. |
ஆரூடத்தில் மூன்று வந்தால், திரிபுரத்தை எரித்த சிவனின் கருணையினால் கஷ்டமொன்றும் ஏற்படாது. பெரியோர்களின் உதவியுண்டாகும். தொழிலில் அதிக லாபங்களையெல்லாம் அடைவாய். மேலும் அரசர்களாலும் பெருமைப் படுத்தப் படுவாய். பலவிதத்திலும் சந்தோஷத்தையே அடைவாய். உனது குலதெய்வத்தை வாணங்கி வர நாளுக்கு நாள் நன்மைகிட்டும் இதுவே சிறப்பு என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 3 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்