ஆரூடப் பாடல் 2 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨. (2) வந்தால்..
வேலுண்டு வினையகலும் கஷ்டந்தீரும் விச்சித்ர மயிலுண்டு கவலை போகும் குழுமே செல்வமது தொழிலுமோங்கும் ஷண்முகனி னருளாலே நலியும்நீயும் பாழான கேதுபத்து நாளிலப்பா பதறாதேயுன்னை விட்டு விலகிப்போவான் தாழாமல் வாழ்ந்திடுவாய் யதன்பின்னாலே தள்ளாதே யகஸ்தியனா ருரைத்தவாக்கே. |
ஆரூடத்தில் இரண்டு வந்தால், முருகக் கடவுளின் கடாட்சத்தால் சகலமான காரியங்களும் தங்குதடையில்லாமல் வெற்றியளிக்கும். அத்துடன் கவலையும் கஷ்டமும் சண்முகன் அருளால் விலகிவிடும். அத்துடன் இதுவரை கஸ்டங்களை கொடுத்துவந்த கேது விலகிச் சென்றதும் குறைவின்றி வாழ முடியுமாம். இது அகத்தியர் வாக்கு என்றும் சொல்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 2 - Sri Agathiyar Horary Wheel - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம் - Horary Astrology - ஆரூடங்கள்