நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 5
சென்ற பாடத்தில் ஆடி மாதம்-30-ம் தேதிக்கு கிரக நிலையைப் போட்டோம். சந்திரனைத் தவிர மீதி எல்லாக் கிரகங்களையும் போட்டு விட்டோம். இப்போது நாம் சந்திரனைப் போடப் போகிறோம். நாம் ஆடி 30-ம் தேதிக்கு என்று கிரகங்களைப் போட்டோமே தவிர எந்த நேரத்திற்கு என்று போடவில்லை. இப்போது மாலை 5.00 மணிக்கு கிரகங்களைப் போடுவோம். பஞ்சாங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆடி 30-ம் தேதி அன்று "நக்ஷ" என்ற கட்டத்திற்கு எதிராக "ரோ 23-11" எனப் போட்டு இருக்கிறார்கள். அதாவது சூரிய உதயத்திலிருந்து 23 நாழிகை 11 வினாழிகை ரோகி ணி நட்சத்திரம் இருக்கிறது. அதாவது பகல் 03-18 முடிய ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. ஆங்கில மணியைப் பக்கத்திலுள்ள கட்டத்தில் கொடுத்து இருக்கிறார்கள். சந்திரன் 23நாழிகை 11 வினாழிகை முடிய மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் எனப் பொருள். அதாவது பகல் 03-மணி 18 நிமிஷங்கள் வரை சந்திரன் ரோகிணியில் இருக்கிறார். அதற்குப்பின் அவர் எங்கு செல்வார்? அடுத்த நட்சத்திரத்திற்குத்தான். அடுத்த நட்சத்திரம் என்ன? மிருகசீரிஷம் தான். மறுநாள் பகல்20-நாழிகை 45 விநாழிகை முடிய (அதாவது பகல் 03மனி 18நிமிஷங்கள் வரை) சந்திரன் மிருகசீரிஷத்தில் இருப்பார். ஆடி 31-ம் தேதியைப் பார்த்தால் இது தெரிய வரும்.
நாம் எடுத்துக் கொண்ட நேரமான மாலை 5.00மணிக்கு சந்திரன் மிருகசீரிஷத்தில் இருக்கிறார் அல்லவா. இப்போது ஒரு சிறு குழப்பம். மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் ரிஷபத்திலும், 3, 4 பாதங்கள் மிதுனத்திலும் இருக்கிறது அல்லவா? சந்திரனை ரிஷபத்தில் போடுவதா அல்லது மிதுனத்தில் போடுவதா? இப்போது சந்திரன் எந்தப்பாதத்தில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்போம். கண்டுபிடித்தால் நமக்குச் சந்திரனை எங்கு போடுவது என்பது விளங்கும்.
ஒரு நாளைக்கு மொதம் 60 நாழிகை எனக் கூறி இருந்தோம். சந்திரன் அன்று 23நாழி கை 11 வினாழிகை ரோகிணியில் சஞ்சாரம் செய்து விட்டார் இல்லையா? மீதிப் பொழுதை மிருகசீரிஷத்தில் அவர் சஞ்சாரம் செய்கிறார்.
ஆடி 30-ம் தேதிக்கு மொத்த நாழிகை 60.00 நாழிகை
ரோகிணியில் சஞ்சாரம் செய்தது 23.11 நாழிகை
----------
மிருகசீரிஷத்தில் சஞ்சாரம் செய்தது 36.49 நாழிகை
----------
சந்திரன் மிருகசீரிஷத்தில் 30-ம் தேதி மட்டும் சஞ்சாரம் செய்யவில்லை. 31-ம் தேதியும் 20நாழிகை 45வினாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார். பஞ்சாங்கத்தைப் பார்த்தால் இதுதெரிய வரும். மிருகசீரிஷத்தில் மொத்தம் எத்தனை நாழிகை சஞ்சாரம் செய்து இருக்கிறார்? இரண்டையும் கூட்டுங்கள். 36.49 + 20.45 =57.34 நாழிகை.இந்த மொத்த நாழிகைக்குப் பெயர் ஆத்தியந்த பரம நாழிகை எனப் பெயர். இப்போது ஆத்தியந்த பரமநாழிகை என்றால் என்ன? எனத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? சந்திரன் ஒரு நட்சத்திரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரமே ஆத்தியந்த பரம நாழிகை எனப்படும்.
நாம் எடுத்துக்கொண்ட நேரம் மாலை 5.00 மணி. அன்றைய சூரிய உதயத்தைக் கண்டு பிடுயுங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? பஞ்சாங்கத்தின் கீழ்ப் பகுதியைப் பாருங் கள். ஆடி 30-க்கு, அதாவது ஆகஸ்டு 14-ம் தேதிக்கு "சூரிய உதய காலை" என்ற கட்டத்தின் கீழ் போட்டுள்ளார்கள் பாருங்கள். காலை 6.02 எனப் போட்டுள்ளார்கள். காலை 6.02 முதல் மாலை 5.00மணி முடிய அதாவது 10 மணி 58 நிமிஷத்தை நாழிகை ஆக்குங்கள். 27-நாழிகை 25 வினாழிகை வரும். அதாவது குழந்தை பிறந்து சூரியோ தயத்திலிருந்து 27நாழிகை 25 வினாழிகை ஆகிருக்கிறது. சூரியோதயத்திலிருந்து 23நாழிகை 13 வினாழிகை முடிய ரோகிணி இருக்கிறது. மீதி (27.25-23.13= 04.12) நாழிகை மிருகசீரிஷத்தில் சென்று இருக்கிறது.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 5 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்