நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 18
சென்ற பாடம் வரையிலும் 3-வது வீடு முடியப் பலன் சொல்லத் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பாடங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள். உங்களுக்குப் புரியும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும். நீங்கள் மொட்டு நிலையிலுள்ள ஜோதிடர். (Budding Astrologers). அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் சூரியன் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தம் பெற வேண்டும். ஏனெனின் சூரியன்தான் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். ராணுவம் அல்லது போலீஸ் வேலைக்குப் போக வேண்டுமென்றால் செவ்வாய் ஜீவனஸ்தானத்துடன் சம்மந்தம் பெறவேண்டும். கலைத் தொழிலில் ஒருவர் இருக்க வேண்டுமென்றால் சுக்கிரன் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் சுக்கிரன்தான் கலைக்கு அதிபதி. இவ்வாறாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு கிரகம் இருக்கிறது. ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.
1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?
2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.
3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.
ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-
"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 18 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்