நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 16
சென்ற பாடத்தில் 2-ம் வீட்டை வைத்து என்னென்ன பலன் சொல்லலாம் என்பதைப் பார்த்தோம். இப்போது எப்படிப் பலன் சொல்வது என்று பார்ப்போம். ஒருவரின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள 2-ம் வீடு, 6-ம் வீடு, 10ம் வீடு 11-ம் வீடு ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். 2-ம் வீடு ஒருவரின் தனஸ்தானம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 6-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும்? 6-ம் வீடு என்பது நாம் ஒருவரின் கீழ் வேலை செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. சிலர் 6-ம் வீடு என்பது ரோகம், ரணம், கடன் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலையும் குறிக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் வருவதுதானே நமது வருமானம். ஆக 6-ம் வீட்டையும் பார்த்தால்தானே நம் வருமானம் தெரியும். ஆக 6-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 10-ம் வீடு என்பது ஜீவன ஸ்தானம் ஆகும். ஜீவனம் என்பது ஒருவருக்கு வியாபாரமாக இருக்கலாம். மற்றொருவருக்கு உத்தியோகமாக இருக்கலாம். ஆக ஜீவனம் என்பது உத்தியோகத்தையோ அல்லது வியாபாரத்தையோ குறிக்கும் பொதுப்படையானவார்த்தை யாகும். ஆக ஒருவரின் பணநிலையைத் தீர்மானம் செய்ய 10-ம் வீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம் ஆகும். நாம் சம்பாதித்து செலவு செய்தது போக மிச்சம்தான் லாபம் என்பது. இதைக் குறிப்பதுதான் லாபஸ்தானம் ஆகும். ஆக இந்த 4-வீடுகளையும் கவனமாக ஆராய்ந்தால்தான் ஒருவரின் பணநிலையை நாம் கூறமுடியும்.
இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர் பிறைச்சந்திரன் ஆகியவை 2-ம் வீட்டில் இருப்பது நல்லது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சனி, ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. பணவசதி குறைவாக இருக்கும். 2-ம் வீட்டின் அதிபதி உச்சமாகவோ அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது தாராளமான பொருளாதாரத்தைக் குறிக்கும். 2-ம் வீட்டை அதன் அதிபதியோ அல்லது மேற் கூறிய சுப கிரகங்களோ பார்த்தாலும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 2-ம் வீட்டில் செவ்வாயோ அல்லது கேதுவோ இருப்பவர்கள் சற்றுக் கடினமான வார்த்தைகளால் பேசுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும். 8-ம் வீட்டின் அதிபதி தனஸ்தானமான 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமை நன்றாக இருக்காது. அதே போன்று 12-ம் வீட்டின் அதிபதியும் 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமையும் நன்றாக இருக்காது.
இரண்டாம் வீட்டின் அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம். இலக்கினத்தில் இருந்தால் அவர் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார். அவருடன் 9-ம் வீட்டதிபதியோ அல்லது சூரியனோ இருப்பாரேயாகில் அவருக்குப் பிதுராஜித சொத்துக்கள் கிடைக்கும். 2-ம் வீட்டதிபதி சொந்த வீட்டிலேயே இருப்பாரேயாகில் பண நிலை சரளமாக இருக்கும். 3-ம் வீட்டிலிருந்தால் இளைய சகோதரத்திட மிருந்து பண உதவி கிட்டும். 3-ம் இடம் இளைய சகோதரத்தைக் குறிப்பது அல்லவா? 4-ம் இடத்திலிருந்தால் என்ன பலன்? 4-ம் வீடு வாகனங்களைக் குறிக்கிறது அல்லவா? வீடு, வாசல், தாய் வழி சொந்தங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே வாகனங்கள் மூலமாகவும், வீடு, வாசல் வாங்கி, விற்றுத் தொழில் செய்தும் பணம் சம்பாதிப்பர். 5-ம் வீடு என்பது கலைகள், Speculation துறைகள் ஆகியவற்றைக் குறிப்பது ஆகும். இதில் 2-ம் வீட்டிற்குடையவர் இருந்தால் கலைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும். லாட்டரி, ரேஸ், போன்றவற்றிலிருந்தும் பணம் இயலும். அதாவது சிரமமின்றி பணம் சம்பாதிக்க இயலும். 6-ம் இடம் என்பது உத்தியோகத்தைக் குறிக்கிறது. அதில் 2-ம் வீட்டதிபர் இருந்தால் அவர் உத்தியோகம் செய்து பணம் சம்பாதிக்க முடியம் என்று கூறலாம். என்ன! எல்லோருமே உத்தியோகம் செய்துதானே பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 16 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - You can become a Astrologer! - Astrology - ஜோதிடம்